வேலூர், தூத்துக்குடி எம்.பிக்கள் ஆதரவு – ஓ.பி.எஸ் அணியின் எண்ணிக்கை உயர்வு!
crazynewschannel
Feb 12, 2017
1 min read
ச
சிகலாவை எதிர்த்து போராடும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மேலும் இரண்டு எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வேலூர் அதிமுக எம்.பி செங்குட்டுவன் மற்றும் தூத்துக்குடி அதிமுக எம்.பி ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி ஆகியோர் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முதல்வரின் வீட்டிற்கு நேரில் சென்று தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு இதுவரை 7 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பன்னீர்செல்வம் அணியின் பலம் அதிகரித்துள்ளது.
Comments