‘‘தலைவனை தேடாதே; நீதான் தலைவன்’’ நிர்வாகி தேர்தல் ‘ஜரூர்’
![](https://static.wixstatic.com/media/d572ed_de676f91dcdf4b93b6efb69b966182e2~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_de676f91dcdf4b93b6efb69b966182e2~mv2.jpg)
இளைஞர்களின் ஒட்டுமொத்த பலத்தை நிரூபிக்கும் களமாக கடந்த மாதம் ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ ஆரம்பிக்கப்பட்டது. இந்த கட்சிக்காக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றுவந்த நிலையில், நிர்வாகிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
தற்போதுள்ள பல்வேறு அரசியல் குழப்பங்கள் நிலவிவரும் சூழ்நிலையில், இளைஞர் கட்சி தற்போது நிர்வாகிகள் தேர்வை தற்போது விரைவுபடுத்தி வருகிறது. அதற்காக மீண்டும் தமிழ்நாடு இளைஞர் கட்சி இளைஞர்களை அழைத்துள்ளது.
அவர்கள் பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்…
தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் தேர்வு :
நமது தமிழ்நாடு இளைஞர் கட்சியின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நிர்வாகிகளை நாமே தேர்வு செய்ய இருக்கின்றோம். நிர்வாகியாக விண்ணப்பிக்க விருப்பம் இருப்பவர்கள் இரண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
1) விருப்ப மனு படிவம், இந்த படிவத்தில் உங்களுடைய சுய விபரங்களை குறிப்பிட்டு உங்கள் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.
2) மக்கள் ஆதரவு படிவம், இதில் உங்களை ஆதரிக்கும் நீங்கள் வசிக்கும் ஊரிலோ அல்லது சொந்த ஊர் சட்டமன்றத்தை சார்ந்த 200 நபர்களிடம், அவர்களின் பெயர், தொழில், வாக்காளர் அடையாள அட்டை எண், கைபேசி எண் மற்றும் அவர்களுடைய கையொப்பம் பெற வேண்டும்.
நீங்கள் 200 நபர்களிடமும் எதற்காக கையொப்பம் பெறப்படுகிறது என்ற காரணத்தை கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். ஏன் இந்த கடினமான தேர்வு முறை என்று நீங்கள் எண்ணினால், ஒரு சட்டமன்ற தொகுதியில் குறைந்தது 2.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
நீங்கள் கையொப்பம் பெறப்போவது வெறும் 200 பேரிடம் தான் (0.08%) !! மக்களிடம் அவர்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என அறிந்து கொள்ளுங்கள். நிர்வாகியாக விண்ணப்பிக்க வயது உச்சவரம்பு கிடையாது, ஆனால் தேர்வு செய்யப்படும் நிர்வாகிகள் குறைந்தது 50% 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள். இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம்.
வேகமும் விவேகமும் சேர்ந்தால் தான் நல்ல அமைப்பாக உருவாக முடியும். நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், நீங்கள் சொந்த ஊருக்கு வந்த பிறகு கூட நிர்வாகியாக விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஸ்கேன் செய்து
info@tnyouthparty.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
விண்ணப்பங்களை சரிபார்த்த பிறகு நிர்வாகிகள் தேர்வு நாள் அறிவிக்கப்படும்.
புதிதாக கட்சி ஆரம்பிக்கும் பொழுது, தனக்கு தெரிந்த நண்பர்களையோ, குடும்ப உறுப்பினர்களையோ தேர்வு செய்யாமல், விரிவான தேர்வுமுறை கொண்டு நல்ல, ஆக்கபூர்வமான நிர்வாகிகளை தமிழகம் முழுவதும் நியமிக்க போகும் ஒரே கட்சி, நமது கட்சி தான் என்பதை மார்தட்டி சொல்லுவோம்.
மக்கள் ஆதரவு படிவம் : http://tinyurl.com/makkal-aadharavu-padivam
விருப்ப மனு படிவம் : http://tinyurl.com/viruppa-manu-padivam
மேலும் தொடர்புக்கு : 8939003599, 9600044518, 9841187313, 9841194405, 9087333111 (தயவு செய்து முக்கியமான தகவலுக்கு மட்டும் அழைக்கவும்)
இந்த தகவல் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் அதிகமாக share செய்யுங்கள். இளைஞர்களின் வெற்றியை இம்முறை யாரும் தடுக்க முடியாது. நாம் வெல்வோம். கட்சியில் இணைய www.tnyouthparty.com என்ற இணையத்தளத்தில் பதியவும்.
‘தலைவனை தேடாதே, நீதான் தலைவன்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments