சிங்கம் படத்தில் சூர்யா ஹரி இயக்கத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒரு போலீஸ் ஆபீசரா சூர்யாவின் நடிப்பு எடுபடவும்,மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகமாக சிங்கம்2 எடுத்தார்கள்.
அதன்பின், சிங்கம் 3 எடுக்கப்பட்டு அந்த படம் ரிலீஸ் ஆகி 10 நாட்கள் ஆகிறது. சிங்கம்3 அபார வெற்றியாம்.ஒரு வாரத்துக்கு உள்ளேயே 100 கோடி வசூல் செஞ்சிட்டுதாம். அதனால் சிங்கம்4 எடுக்க முடிவு செஞ்சு இருக்காங்களாம்.
ஆனால், அதற்கு நடுவில் வேறு ஒரு படம் பண்ணிட்டு, 5 வருஷம் கழிச்சி சிங்கம்4 பண்ணலாம்ன்னு முடிவு பண்ணி இருக்காங்க.
சிங்கம் 3க்கே சூர்யா கத்துற கத்து தாங்க முடியலை . இதயம் பலகீனமானவர்கள் படம் பார்க்காதீங்கன்னு சொல்லி மீம்ஸ் வர அளவுக்கு அந்த கத்து கத்தி இருக்கார். சும்மாவா, ஒரு வாரத்துக்குள்ள 100 கோடில்ல?
Comments