அமைச்சர்களின் வீடுகளில் போலீஸ் ஆய்வு: தப்பித்து ஓடிய எடப்பாடி பழனிச்சாமி.!
சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தனது வீடுகளில் எம்.எல்.ஏக்களை கட்டாயப்படுத்தி தங்க வைத்திருந்தார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ஏக்களை சிலர் மிரட்டி அடைத்து வைத்துள்ளனர் அவர்களை மீட்கக்கோரி ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தினர்.
இதனையடுத்து போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அனைத்து எம்.எல்.ஏக்களையும் உடனடியாக பாதுகாப்பாக உள்ளனரா என்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் அதிரடியாக ஓட்டல், அமைச்சர்கள் வீடு, எம்.எல்.ஏ. விடுதிகள் ஆகியவைகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.
போலீஸ் வருவதை கண்ட எடப்பாடி பழனிச்சாமி தன்னுடன் தங்கியிருந்த எம்.எல்.ஏக்களை அழைத்து கொண்டு அவரச அவசரமாக காரில் வெளியேறி சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments