சென்னை மெரினா கடற்கரையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெரினா கடற்கரையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் இருந்துள்ளார். இதனை அருகில் இருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments