மணப்பாடு படகு விபத்து; உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்!!
crazynewschannel
Feb 27, 2017
1 min read
திருச்சி மற்றும் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த சுமார் 38 பேர் மணப்பாடு பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் குழுவாக நேற்று கடலுக்குள் படகு சவாரி சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, கடலில் எழுந்த ராட்சத அலையால் படகில் பயணம் செய்த 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், மணப்பாடு கடல்பகுதியில் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு முதல்வரின் பொதுநிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Comments