OPS ஐ கழற்றிவிட்டு தனியாக கட்சி தொடங்குகிறார் தீபா!crazynewschannelFeb 24, 20171 min read ஜெயலலிதா பிறந்த நாளான 24 ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என தீபா கூறி இருந்தார். இதற்கிடையே ஓ.பி.எஸ் உடன் திடீர் சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு, தனது அரசியல் பிரவேசம் அன்றே தொடங்கிவிட்டதாக அறிவித்தார்.இந்நிலையில் தற்போது ஓ.பி.எஸ் உடன் அவர் உடன்படவில்லை என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் நாளை அவர் தனியாக பேரவை ஒன்றை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.ஓ.பி.எ.சுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை போல் அதிமுகவினரிடையே தீபாவுக்கு பெரிய அளவில் ஆதரவு உள்ளது. ஒ.பி.எஸ், தீபா, சசிகலா என 3 தரப்பினரின் செயல்பாடுகளால் அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Comments