மத்திய மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவால், ஒரு நாளைக்குள் 60 பேருக்கு அதிகமானோர் இறந்தது உள்பட, அந்நாட்டில் 100 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.
இந்துகுஷ் மலைத்தொடர் வழியாக செல்லும் சலாங் சுரங்கப்பாதையில், டஜன்கணக்கான ஓட்டுநர்கள் உணவு அல்லது சுகாதார வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
அதிக குளிரால் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் காபூலில் பனிப்பொழிவால் சில கட்டடங்கள் தரைமட்டமாகியிருக்கும் நிலையில், சர்வதேச விமானநிலையம் மூடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வட பகுதியிலுள்ள இமயமலை பகுதிகளில் ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது 10 பேர் இறந்துள்ளனர்.
Komentar